சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்காவுக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று காலை அலறி மாளிகையில் நடைபெற்றது.
நேற்றைய தினம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸாரும், அரசாங்கமும் செய்யவேண்டிய கடமையை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டதாக கலந்துரையாடலின் பின்னர் டெய்லி சிலோனுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். (ஸ)